நடிகராக மாறிய ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்த கிரிக்கெட்டர்..!
கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்த ஹரிஷங்கர், தற்போது நடிகராகக் கலக்கி வருகிறார்.இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான ‘லேபில்’ சீரிஸில், புதுமுக நடிகராக அறிமுகமாகி அனைவரையும் ஈர்த்துள்ளார்.
இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர். அண்டர் 19 பிரிவில் தேசிய போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்றவர். ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சச்சின் விளையாடிய இறுதிப்போட்டி உள்பட பல போட்டிகளில் பகுப்பாய்வளராக பணியாற்றியுள்ளார்.விளையாட்டில் கலக்கிய ஹரிஷங்கர், தன் கனவை நனவாக்கும் வகையில் திரைத்துறையில் நடிகராக நுழைந்துள்ளார்.
முதலில், தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமான ஹரிஷங்கர், கலர்ஸ் தொலைக்காட்சியின் அம்மன், மாங்கல்ய சபதம், விஜய் தொலைக்காட்சியின் காற்றுக்கென்ன வேலி போன்ற தொடர்களில் நடித்துள்ளார். பின்னர் வெள்ளித் திரை படங்களுக்காக தன்னை முழுமையாக 2 ஆண்டுகள் தயார் செய்து கொண்டவர், மாயத்திரை, டிரைவர் ஜமுனா, பட்டாம்பூச்சி உள்ளிட்ட படங்களில் துணைக் காதாப்பாத்திரங்களில் நடித்தார்.தற்போது வெளியாகியுள்ள லேபில் சீரிஸில் நடித்துள்ளது அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது கதாப்பாத்திரம் தனித்துத் தெரிவதுடன், அவரது நடிப்பை, பலரும் பாராட்டி வருகிறார்கள்