காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அமித்ஷா மரியாதை..!

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் சுற்றுலா தலத்தில், ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், நேற்று நடத்திய தாக்குதலில், வெளிநாட்டவர் இருவர் உட்பட, 26 சுற்றுலா பயணியர் உயிரிழந்தனர். சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.
பயங்கரவாதிகளுக்கு தக்க பதலடி கொடுக்க முக்கிய ஆலோசனை நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள, அமித்ஷா பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சின்னாறு எல்லை பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், பயங்கரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், காஷ்மீரில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பிறகு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.