1. Home
  2. தமிழ்நாடு

அமித்ஷா தூங்கிக்கொண்டே பகல் கனவு காண்கிறார் - அமைச்சர் ரகுபதி விமர்சனம்..!

Q

அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்த கூறியதாவது:-

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தூங்கிக்கொண்டே பகல் கனவு காண்கிறார். தமிழகத்தின் கள நிலவரம் பற்றி அவர் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. மற்ற மாநிலங்களை போல தமிழகத்தை நினைத்து கொண்டிருக்கிறார். மற்ற மாநிலங்களை தமிழகத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறார். அவரது நினைப்பு, விருப்பம் என்பது ஒரு சதவீதம் கூட தமிழகத்தில் கிடையாது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் வருவாய் எவ்வளவு இருந்தது? தற்போது தமிழகத்தின் வருவாய் மத்திய அரசுக்கு எவ்வளவு செல்கிறது? என்பதை தெரிவித்துவிட்டு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு பெற்று வரும் நிதி அளவுக்கு தமிழகத்துக்கு திருப்பி தருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like