1. Home
  2. தமிழ்நாடு

அசத்தலான போஸ்ட் ஆபீஸ் திட்டம் : வட்டி மட்டுமே ரூ. 2.5 லட்சத்துக்கு மேல்..!

1

வங்கிகள், போஸ்ட் ஆபீஸ்கள், எல்ஐசி நிறுவனங்கள் பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் தபால் நிலையங்கள் சேமிக்க விரும்புகிறவர்களுக்காக ஏராளமான சேவிங்க்ஸ் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தபால் நிலைய முதலீடு திட்டங்களில் இந்தியாவில் வசிக்கும் எவர் வேண்டுமானாலும் குறைந்த பணத்தை டெபாசிட் செய்து சேமிப்பு கணக்குகளை துவங்கலாம்.

இதில், போஸ்ட் ஆபிஸின் தொடர் வைப்புத்தொகை (RD) பாதுகாப்பான அரசாங்க முதலீட்டுத் திட்டமாகும். இந்தியாவில் வசிக்கும் எவரும் இந்த திட்டத்தின் கீழ் 100 ரூபாயை வைத்து சேமிப்பு கணக்கை துவங்கலாம். அதிகபட்ச RD முதலீடுகளுக்கு வரம்பு கிடையாது. முதலீட்டாளர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு பணத்தை டெபாசிட் செய்யலாம்.

போஸ்ட் ஆபீஸ் தொடர் வைப்புத்தொகை திட்டம் ஒருவர் மாதந்தோறும் ரூ. 5000 டெபாசிட் செய்யும் போது, 5 வருடங்களில் மொத்த முதலீடாக ரூ. 3 லட்சம் இருக்கும். இதற்கு வட்டியாக மட்டும் ரூ. 56,830 தொகை கிடைக்கும். இதன் மூலமாக ஐந்து வருடங்களில் மொத்தமாக ரூ. 3,56,830 மெச்சூரிட்டி தொகையாக கிடைக்கும்.

இதனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீட்டாளர் நீட்டித்தால், மொத்த முதலீட்டு காலம் காலம் 10 ஆண்டுகள் ஆகும். இதனால் மொத்தமாக முதலீடு செய்யப்படும் தொகை ரூ. 6 லட்சமாக இருக்கும். இதற்கு வட்டியாக மட்டுமே ரூ. 2,54,272 தொகை கிடைக்கும். இதன் மூலமாக 10 ஆண்டுகள் முடிவில் முதலீட்டாளர் ரூ. 8,54,272 மெச்சூரிட்டி தொகையாக பெறலாம்.

Trending News

Latest News

You May Like