அனைத்து நன்மைகளையும் தரும் அற்புத மந்திரம்..!

நரசிம்மர் உக்கிர வடிவம் உடையவர் என்றாலும் அவரது மடியிலேயே லட்சுமி தேவி எப்போது வீற்றிருப்பதால் லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும். அளவில்லாத செல்வங்கள் சேரும். நோய்கள் தீரும். நரசிம்மருக்கு உரிய சுவாதி நட்சத்திரத்தில் அவருக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபடுவது சிறப்பு.
லட்சுமி நரசிம்மர் 108 போற்றி :
01. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
02. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
03. ஓம் யோக நரசிங்கா போற்றி
04. ஓம் ஆழியங்கையா போற்றி
05. ஓம் அங்காரக் கனியே போற்றி
06. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
07. ஓம் எக்காலத் தேந்தாய் போற்றி
08. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
09. ஓம் சங்கரப்ரியனே போற்றி
10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி
11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
12. ஓம் உலப்பில் கீர்த்தியம்மா போற்றி
13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
15. ஓம் தாமரைக்கண்ணா போற்றி
16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
17. ஓம் ஊழி முதல்வா போற்றி
18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
19. ஓம் இராவணாந்தகனே போற்றி
20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
21. ஓம் பெற்ற மாளியே போற்றி
22. ஓம் பேரில் மணாளா போற்றி
23. ஓம் செல்வ நாரணா போற்றி
24. ஓம் திருக்குறளா போற்றி
25. ஓம் இளங்குமார போற்றி
26. ஓம் விளங்கொளியே போற்றி
27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
28. ஓம் வந்தெனையாண்டாய் போற்றி
29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
30. ஓம் இமையோர் தலைவா போற்றி
31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
34. ஓம் வேங் கடத்துறைவா போற்றி
35. ஓம் நந்தா விளக்கே போற்றி
36. ஓம் நால் தோளமுதே போற்றி
37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
40. ஓம் வாமதேவனுக்களித்தாய் போற்றி
41. ஓம் மூவா முதல்வா போற்றி
42. ஓம் தேவாதி தேவா போற்றி
43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
45. ஓம் வரவரமுனிவாழ்வே போற்றி
46. ஓம் வடதிருவரங்கா போற்றி
47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
51. ஓம் மாலே போற்றி
52. ஓம் மாயப் பெருமானே போற்றி
53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
56. ஓம் மண் மீதுழல்வோய் போற்றி
57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
62. ஓம் முற்றவிம் மண்ணளந்தாய் போற்றி
63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
64. ஓம் அரவிந்த லோசன போற்றி
65. ஓம் மந்திரப் பொருளே போற்றி
66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
67. ஓம் குரும்பரம்பரை முதலே போற்றி
68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
69. ஓம் பின்னை மணாளா போற்றி
70. ஓம் என்னையாளுடையாய் போற்றி
71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
72. ஓம் நாரண நம்பி போற்றி
73. ஓம் பிரகலல்லாதப்ரியனே போற்றி
74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
76. ஓம் ஏழு மாமுனிவர்க்கருளே போற்றி
77. ஓம் ஏமகூட விமானத்திறைவா போற்றி
78. ஓம் ஆணையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
83. ஓம் இனியாய் போற்றி
84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
85. ஓம் புனலரங்கா போற்றி
86. ஓம் அனலுருவே போற்றி
87. ஓம் புண்ணியா போற்றி
88. ஓம் புராணா போற்றி
89. ஓம் கோவிந்தா போற்றி
90. ஓம் கோளரியே போற்றி
91. ஓம் சிந்தாமணி போற்றி
92. ஓம் சிரீதரா போற்றி
93. ஓம் மருந்தே போற்றி
94. ஓம் மாமணி வண்ணா போற்றி
95. ஓம் பொன் மலையாய் போற்றி
96. ஓம் பொன்வடிவே போற்றி
97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி
101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
103. ஓம் வள்ளலே போற்றி
104. ஓம் வரமருள்வாய் போற்றி
105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
107. ஓம் பத்தராவியே போற்றி
108. ஓம் பக்தோசிதனே போற்றி
நரசிம்ம மகா மந்திரம்:
ஓம் ஹ்ரீம் ஷெளமுகம் விரம் மஹாவிவ்னும்ஜ் வலந்தம் ஸர்வதோமுகம்
நரஸிம்ஹம் பீஷணம் பாத்ரம்மசிருத்யோர் மிருத்யம் நமாம்யஹம்
பொருள்: கோபமும் தைரியமும் கொண்ட மகாவிஷ்ணுவே, உனது வெப்பமும் நெருப்பும் எங்கும் பரவுகின்றன. நரசிம்ம பகவானே, நீ எங்கும் இருக்கிறாய். நீ மரணத்தின் மரணம். நான் உன்னிடம் சரணடைகிறேன்.
நரசிம்ம வழிபாட்டில் முக்கியம் வாய்ந்த நரசிம்ம மந்திரத்தை வியாழக்கிழமையில், நரசிம்மர் முன் நெய் விளக்கேற்றி வைத்து, மஞ்சள் ஆடை அணிந்து, வடக்கு நோக்கி அமர்ந்து பாராயணம் செய்ய துவங்க வேண்டும். நரசிம்ம மந்திரம் பாராயணம் செய்பவர்களுக்கு பயம், கஷ்டங்கள் நீங்கும். எந்த சூழலிலும் மன அமைதியை இழக்க மாட்டார்கள். துன்பங்களும், கஷ்டங்களும் அவர்களை நெருங்காது. அமைதி, செல்வ வளம், நிம்மதி ஆகியவை கிடைக்கும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் பிறக்கும் என்பது நம்பிக்கை.
பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டு வருவதுபோல லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் இல்லத்தில் சுபிட்சம் ஏற்படுவதோடு தீராத நோய்களும் தீரும். நினைத்த காரியம் நிறைவேறும் சனிக்கிழமைகளில் லட்சுமி நரசிம்மரை வழிபட்டு வந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். லட்சுமி நரசிம்மருக்கு பானகத்தை மட்டுமே வைத்து நைவேத்தியம் செய்து வந்தால் எட்டு திசைகளில் இருந்தும் நன்மை வீடு தேடி வரும். வீட்டில் தீயசக்திகள் இருந்தால் விலகி ஓடிவிடும்.
பெரும்பாலான நரசிம்மர் கோவில்களில் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர்கள் மட்டுமே தினசரி பூஜை செய்ய நியமிக்கப்படுவார்கள் யோக நரசிம்மர் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோவில்களில் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.