1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் உஷார் நிலை! மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

1

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து வரலாறு காணாத தாக்குதல் தொடர்வதால் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் மூண்டது.போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்களான மால்கள், திரையரங்குகள், கோவில்கள் மற்றும் கடற்கரை ஆகிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.இரவு நேரத்தில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like