1. Home
  2. தமிழ்நாடு

நாளை அட்சய திருதியை : நாளை தங்கம் மட்டும்தான் வாங்கணுமா?

1

ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனியை மழையாகப் பொழிய வைத்த நாள் 'அட்சய திருதியை' நாளாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஒரு குண்டுமணி தங்கம் வாங்கினாலும் அந்த ஆண்டு முழுவதும் தங்கம் பெரும் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டிற்கான அட்சய திருதியை நாளை கொண்டாடப்படுகிறது. 

அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் மட்டும்தான் வாங்க வேண்டுமா? தங்கம் வாங்க வசதியில்லாதவர்கள் என்ன செய்யலாம் என்பதை அறியலாம்.

இது வைசாக மாதத்தில் சுக்ல பக்ஷ திருதியை அன்று வருகிறது. ரோகிணி நட்சத்திரம் மற்றும் புதன்கிழமையுடன் கூடிய அக்ஷய திருதியை மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. அன்று விஷ்ணு மற்றும் லட்சுமி தேவியை வழிபட்டு தானம் செய்தால் நன்மை கிடைக்கும். அக்ஷய திருதியை பூஜைக்கான நேரம் காலை 5:41 மணி முதல் மதியம் 12:18 மணி வரை. திருதியை திதி ஏப்ரல் 29, 2025 அன்று மாலை 5:31 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 30, 2025 அன்று மதியம் 2:12 மணிக்கு முடிவடைகிறது. அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த நாளில் சில பொருட்களை வாங்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.

தங்கம்:


அக்ஷய திருதியை அன்று தங்கம் வாங்குவது மிகவும் சிறந்தது. அன்று நிறைய பேர் நகை கடைகளுக்கும், ஆன்லைன் கடைகளுக்கும் சென்று தங்கம் வாங்குகிறார்கள். தங்க நாணயம் அல்லது செயின் என எதுவாக இருந்தாலும், தங்கம் வீட்டிற்கு கொண்டு வந்தால் அதிர்ஷ்டம் பெருகும் என்பது நம்பிக்கை.


மண் பானை:


தங்கம் வாங்க முடியாதவர்கள் மண் பானை வாங்கலாம். மண் பானையை பயன்படுத்துவதால் அது ஒரு நல்ல முதலீடு. மண் பானை பூமியின் அடையாளமாக கருதப்படுகிறது. இது தாய் பூமியின் ஆசீர்வாதத்திற்கு சமம்.


துளசி செடி:


துளசி செடி லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது. வீட்டில் ஆரோக்கியமான துளசி செடி இருந்தால், வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருப்பார்கள். மேலும் இது வெற்றி மற்றும் செழிப்பை தரும்.


கல் உப்பு:


கல் உப்பு ஒரு சுத்திகரிப்பு பொருள். இது எதிர்மறை ஆற்றலை நீக்கும். எனவே, எதிர்மறை எண்ணங்களை விரட்ட மக்கள் இந்த நாளில் கல் உப்பு வாங்குகிறார்கள்.

Trending News

Latest News

You May Like