சேப்பாக்கத்தில் அஜித்..!

சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சிஎஸ்கே ஆட்டத்திற்கு அஜித் வந்திருந்தார். தனது குடும்பத்தோடு ஆட்டத்தை பார்க்க அவர் வந்தார். நடிகர் அஜித் சினிமா தாண்டி இப்போது விளையாட்டு துறையில் தீவிர கவனம் செலுத்துகிறார்.
இவர் கார் ரேஸிங் ஒரு பக்கம் தீவிரமாக செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட துபாயில் நடந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். அஜித் குமார் அணி தொடங்கப்பட்ட சில வாரங்களில் முறையாக பயிற்சி எடுத்து அந்த அணி சாதனை படைத்து உள்ளது.
துபாய் ஆட்டோட்ரோமில் நடந்த மிச்செலின் துபாய் 24H பந்தயத்தில் WRTயின் அல் ஃபைசல் அல் ஜுபைர், டான் ஹார்பர், மேக்ஸ் ஹெஸ்ஸி, பென் டக் மற்றும் டேரன் லியுங் ஆகியோரின் அல் மனார் ரேசிங் அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. அல் மனார் ரேசிங் அணி துபாய் சர்க்யூட்டின் 589 சுற்றுகளை 24 மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. இரண்டாவது இடத்தை Pure Rxcing அணியின் தாமஸ் ப்ரீனிங், ஹாரி கிங் , அலெக்ஸி நெசோவ் மற்றும் அலியாக்சாண்டர் மாலிகின் ஆகியோர் வென்றுள்ளனர்.
துபாயில் நடந்தஇந்த கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி 3ஆம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. நேற்று துபாயில் இருந்த அவரின் ரசிகர்கள் படை.. இந்திய நட்சத்திரங்கள் பலர் இதை கொண்டாடினார்கள். முதல் பரிசு வென்றவர்களை விட.. 3ம் பரிசு வென்ற அஜித்திற்கே ஆரவாரம் இருந்தது. அவர்கள் பக்கம் பெரிதாக நேற்று கேமரா செல்லவில்லை. மாறாக மொத்த கேமரா குழுவும் அஜித் பக்கம் இருந்தது. அந்த ரேஸுக்கே எடுத்துக்காட்டு போல.. ஒரு பிராண்ட் போல அஜித் அங்கே நின்று கொண்டு இருந்தது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் மேட்ச் பார்க்கவும் இன்று அஜித் வந்தார். கடந்த சில போட்டிகளைக் சிஎஸ்கே தோல்வியால் ஆட்டம் பெரிதாக ஈர்க்காத நிலையில் இன்று அஜித் வந்தது பெரிய அளவில் ஆட்டத்தை விறுவிறுப்பாக பலரும் பார்க்க காரணமாக இருந்தது.