1. Home
  2. தமிழ்நாடு

ஏர் இந்தியா விமான விபத்து : நடந்தது என்ன? - உயிர் பிழைத்தவர் பேட்டி

1

மிகப்பெரிய விமான விபத்தாக கருதப்படும் அகமதாபாத் விமான விபத்தில் நல்வாய்ப்பாக விஸ்வாஸ் குமார் என்ற நபர் உயிர் பிழைத்துள்ளதாக அகமதாபாத் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். விமானத்தில் 11ஏ இருக்கையில் பயணித்த பிரிட்டீஷ் குடியுரிமை பெற்ற விஸ்வாஸ் குமார், எமர்ஜென்ஸி எக்ஸிட் எனப்படும் அவசர கால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

அவருக்கு மார்பு, கால், கண் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு விஸ்வாஸ் குமார் நடந்து செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளன. 40 வயதான விஸ்வாஸ்குமார் மனைவி குழந்தைகளுடன் 20 வருடங்களாக லண்டனில் வசித்து வருகிறார்.

விஸ்வாஸ் குமார் அளித்த பேட்டியில், “விமானம் புறப்பட்ட 30 வினாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. இவை அனைத்தும் மிக விரைவாக நடந்தன. நான் எழுந்தபோது என்னைச் சுற்றி உடல்கள் கிடந்தன. விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. நான் பயந்து எழுந்து ஓடத் தொடங்கினேன். என்னை பிடித்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்” என்று தெரிவித்தார்.


 


 

Trending News

Latest News

You May Like