1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொரோனாவால் பாதிப்பு..

அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொரோனாவால் பாதிப்பு..


தமிழகத்தில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நாள்தோறும் 5,500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்போது கடந்த சில வாரங்களாக அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்கவுள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய கட்சி அறிவுறுத்தியிருந்தது. அதன்படி பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு பரிசோதனை முடிவுகள் வரத்தொடங்கியுள்ளன.
அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி.. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கொரோனாவால் பாதிப்பு..
இதில் சட்டப் பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பொள்ளாச்சி ஜெயராமன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏற்கனவே செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க இருந்த செஞ்சி எம்எல்ஏவுக்கு கொரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

newstm.in


Trending News

Latest News

You May Like