1. Home
  2. தமிழ்நாடு

வாக்காளர்கள் சிறப்பு முகாம்களில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு ஆர்வத்துடன் உதவிட வேண்டும் : செல்லூர் கே.ராஜூ..!

1

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதியவாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 தினங்களுக்கு நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாம்களில் புதிய வாக்காளர்களாக சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக சிறப்பு முகாம்களுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள்  ஆர்வத்துடன் உதவிட வேண்டும். பொதுமக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும், அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையு் முன்னின்று செய்திட வேண்டுகிறேன். இவ்வாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like