1. Home
  2. தமிழ்நாடு

வைரலாகும் அதிமுக ஒட்டிய போஸ்டர்கள் : "1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?"

1

அமலாக்கத்துறை வழக்கு மூலம் செந்தில் பாலாஜி தொடர் நெருக்கடியில் உள்ள நிலையில் அவரது சொந்த மாவட்டமான கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை கண்டித்து அதிமுக போஸ்டர் ஒட்டியுள்ளது.

"1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?" என்று போஸ்டரில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினர் தமிழகம் முழுவதும் அரசு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.


போஸ்டரில் டாஸ்மாக் ஊழல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. "டாஸ்மாக் ஊழல் பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் 1000 கோடி, உரிமம் பெறாத பார்கள் மூலம் 40,000 கோடி ஊழலா என மக்கள் கேள்வி?" என்று போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளது.


அதாவது, டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் ஊழல் நடப்பதாகவும், விற்பனையில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உரிமம் இல்லாத பார்கள் மூலம் 40,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த ஊரில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. "1000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து 1000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?" என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த போஸ்டர் சமூக வலை தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like