ஏழு தொகுதிகளில் டெபாசிட்டை இழந்த அ.தி.மு.க...!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இன்டியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இன்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை . தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.
இதைபோல, தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பின்னடைவு பெற்றுள்ளது. குறிப்பாக, அதிமுக தமிழ்நாட்டில் போட்டியிட்ட 32 தொகுதிகளில் 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது. அதிமுக டெபாசிட் இழந்த தொகுதிகள் வருமாறு., தென்சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர், தேனி, புதுச்சேரி. மேலும், ஒன்பது தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 2 தொகுதிகளில் 2-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள் வருமாறு. மதுரை, தென்சென்னை, தேனி, ராமநாதபுரம், வேலூர், நெல்லை, நீலகிரி, தருமபுரி, கோவை. அதிமுக 4-வது இடத்திற்கு தள்ளப்பட்ட தொகுதிகள் வருமாறு., கன்னியாகுமரி, புதுச்சேரி.