பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் வாழ்த்து..!
பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள நரேந்திரமோடி அவர்களுக்கு அதிமுக மற்றும் எனது சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த சில ஆண்டுகளாக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து செயல்பட்டது. மோடியின் கடந்த ஆட்சிகாலத்தில் பல்வேறு முக்கியத்திட்டங்களுக்கு அதிமுக தனது ஆதரவை அளித்து வந்தது. இந்த சூழலில் பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட அண்ணாமலையின் செயல்பாடுகளால், இந்த கூட்டணி உடைந்தது. எனவே நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக தனித்தனியாக அணி அமைத்து போட்டியிட்டன.
இந்திய நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்க உள்ள மாண்புமிகு @narendramodi அவர்களுக்கு @AIADMKOfficial மற்றும் எனது
— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) June 7, 2024
சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
I extend my hearty Congratulations on behalf of @AIADMKOfficial to
Honourable @narendramodi avl,…