மீண்டும் மீண்டுமா ? 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. வடமாநில வாலிபர் கைது..!
சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தேனீக்கள் கூடு கட்டி இருந்தன. அதனை அகற்றுவதற்காக வடமாநில வாலிபர் ஒருவரை அழைத்துச் சென்றுள்ளனர். தேன் கூடுகளை அகற்றுவதற்காக சென்ற அந்த நபர், அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு இது பற்றி போலீசுக்கு தெரிவித்தனர். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபரையும் மடக்கி பிடித்து அண்ணா நகர் மகளிர் போலீஸ் நிலை யத்தில் ஒப்படைத்தனர். போக்சோ வழக்கில் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருந்ததை நோட்டமிட்ட கொடூரன், நைசாக யாரும் இல்லாத நேரத்தில் வாயை பொத்தி அருகே இருந்த காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த செய்தி தமிழகத்தையே உலுக்கியது எனது குறிப்பிடத்தக்கது.