1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்தில் பானி பூரி கடைகளில் சோதனை நடத்த ஆணை!

A

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பானிபூரி கடைகளில் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். பானிபூரி கடைகளில் பயன்படுத்தப்படும் பூரி மசால், மசாலா நீரின் மாதிரிகளை சோதனை செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான காரணம் என்னவென்றால் பானி பூரிக்கான மசாலா நீரில் பச்சை நிற நிறமி சேர்க்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் சோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகாவில் பானி பூரி நீரில் புற்றுநோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டுள்ளதால் தமிழகத்தில் அதிரடி சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார் கூறியதாவது:-

கர்நாடகாவில் பானிபூரி சோதனை செய்யப்பட்டு புற்றுநோய்க்கான காரணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அனைத்து பானிபூரி கடைகளிலும் உடனடியாக சோதனை செய்ய ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையை பொறுத்தவரை ஆயிரக்கணக்கான கடைகள் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தனிதனியாக உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் அனைவரும் மாதிரிகளை சேகரித்து சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் வைத்திருக்கும் பானிபூரி பாதுகாப்பற்றது என்ற சோதனை முடிவில் தெரியவந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Trending News

Latest News

You May Like