1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : சென்னையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

1

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால், சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு டிசம்பர் 04- ஆம் தேதி முதல் டிசம்பர் 06- ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்திருந்தது.

புயல், வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (டிச.07) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.” இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் நாளை (07.12.2023) ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் ஆகிய 2 தாலுக்காவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டில் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுக்காக்காவிற்கு மட்டும் நாளை (07.12.2023) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Trending News

Latest News

You May Like