1. Home
  2. தமிழ்நாடு

அட்ரா சக்க... 100 திருக்குறளை தலைகீழாக சொல்லி அசத்தும் 7 வயது சிறுவன்..!

Q

கோவை பீளமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருபவர் கவின் சொற்கோ.

திருக்குறள் படிப்பதில் ஆர்வம் கொண்ட கவின் சொற்கோ, தினமும் திருக்குறள்களை படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளான். நல்ல நினைவாற்றல் இருப்பதன் காரணமாக கடினமான திருக்குறள்களை கூட நினைவில் வைத்திருந்து எளிதாக சொல்லும் திறன் கவின் சொற்கோவிற்கு இருக்கிறது. இதனையறிந்த அவனது பெற்றோர் அதற்கேற்ப திருக்குறள்களை சொல்லித் கொடுத்து வந்துள்ளனர்..

அதன் விளைவாக தற்போது 100 முதல் 1 வரையுள்ள 100 திருக்குறள்களை தலைகீழ் வரிசையில் சொல்லி அசத்துகிறான், கவின் சொற்கோ. அதுமட்டுமின்றி ஓன்று முதல் 100 வரை வரிசையாக குறள்களை சொல்வது, வரிசை எண்களை கூறினால் அந்த எண்ணிற்கான குறளை சொல்வது, அதிகாரத்தின் பெயரை கூறினால் அதிலுள்ள 10 குறள்களை சொல்வது என திருக்குறளை பல்வேறு வகையிலும் கவின் சொற்கோ சொல்லி அசத்துகிறான். 

இதுகுறித்து கவின் சொற்கோ கூறுகையில், திருக்குறள் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தற்போது வரை 100குறள்களை படித்துள்ளேன். அதை எப்படி கேட்டாலும் தவறில்லாமல் சரியாக சொல்வேன். 1330 திருக்குறளையும் படிக்க வேண்டும் என்பது எனது ஆசை எனத் தெரிவித்தான். 

Trending News

Latest News

You May Like