கோவை மருதமலை முருகன் கோயிலில் நடிகை திரிஷா வழிபாடு..!
திரிஷா திரைத்துறையில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். திரிஷா முதன் முதலாக சூர்யாவுடன் கதாநாயகியாக அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ல் வெளிவந்த மௌனம் பேசியதே படத்தில் நடித்தார். இதனையடுத்து ஆறு திரைப்படத்தில் நடித்தனர். மேலும் ஆய்த எழுத்து படத்தில் நடித்தாலும் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்தார்.
அதற்கு முன்னதாக ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்தார். மேலும் விளம்பரப்படங்களிலும் நடித்து வந்தார். கில்லி திரைப்படம் திரிஷாவுக்கு திரையில் நிரந்தர இடத்தினைக் கொடுத்தது. இன்றும் ஹீரோயினாக நடித்து வரும் திரிஷா அடுத்தடுத்து விடாமுயற்சி, தக் லைஃப் என பிஸியாக இருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை கோவை மருதமலை முருகன் கோவிலில் சென்று வழிபாடு செய்தார். திரிஷாவைப் பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.