1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகை பவித்ரா கவுடா, நடிகர் தர்ஷன் கைது..!

1

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த ரேணுகா சாமியின் கொலை வழக்கில் தான் தர்ஷன் கைது செய்யப்பட்டிருக்கிறாராம். மைசூரில் இருக்கும் பண்ணை வீட்டில் இருந்த தர்ஷனை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ரேணுகா சாமி கொலை வழக்கில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

தர்ஷனுக்கு நெருக்கமான நடிகையான பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகா சாமி மோசமாக கமெண்ட் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரேணுகா சாமி பிணமாகக் கிடந்தது ஜூன் 9 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

ரேணுகா தற்கொலை செய்து கொண்டார் என முதலில் நினைத்தார்கள். விசாரணையில் தான் அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.தர்ஷன் சொல்லித் தான் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டதை போலிசார் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் இருக்கும் தர்ஷன் வீட்டு கராஜில் வைத்து ரேணுகா சாமியை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்து பின்னர் உடலை வேறு இடத்தில் வீசியிருக்கிறார்கள். தர்ஷன் கண் முன்பு தான் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. தர்ஷனுக்கும், பவித்ரா கவுடாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தர்ஷனை காமாக்ஷிபாளையா காவல் நிலையித்திற்கு கொண்டு வரப் போகிறார்களாம். சமூக வலைதளத்தில் கமெண்ட் போட்டதற்காக ஒரு ஆண் கொலை செய்யப்பட்டிருக்கிறாரே, நாடு எங்கே போகிறது என கன்னட சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கன்னட நடிகை பவித்ரா கவுடாவை போலீசார் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like