1. Home
  2. தமிழ்நாடு

நடிகை கொல்லங்குடி கருப்பாயி காலமானார்!

1

நாட்டுப்புற பாடகியான கொல்லங்குடி கருப்பாயி அம்மாள்  வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமாகியுள்ளார். அவருக்கு வயது 99.

இவர் அகில இந்திய வானொலியில் நிகழ்ச்சி நடத்துனராக தனது கலைவாழ்க்கையைத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார். இசைத்துறையில் அவர் செய்த சேவைக்காக அவருக்கு 1993 ஆம் ஆண்டு கலைமாமணி விருது அளிக்கப்பட்டது.
 

பாண்டியராஜன் இயக்கி நடித்த ஆண்பாவம் படத்தின் மூலமாக இவர் திரையுலகில் நுழைந்தார். அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் வெகுவாக சிலாகிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் தொடர்ந்து சில படங்களில் நடித்தார்.  அதில் பாண்டியராஜனுடன் இணைந்து நடித்த கோபாலா கோபாலா மற்றும் ஆயுசு நூறு ஆகிய படங்கள் குறிப்பிடத்தகுந்தன. தமிழ் சினிமாவில் இவர் பாடல்களும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like