பொது இடத்தில் நடிகை காஜல் அகர்வாலிடம் அத்துமீறிய ரசிகர்..! பதறிப் போன நடிகை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/53ba348d45855ced7be998c05fab715b.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழ் சினிமாவில் 'பழனி' படம் மூலமாக நடிகையாக அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு தெலுங்கில் வெளியான 'மகதீரா' படம் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. தமிழிலும் இப்படம் 'மாவீரன்' என்ற பெயரில் வெளியானது. இப்படத்திற்கு பின்னர் பிசியான நடிகையாக மாறிய காஜல் அகர்வால், பல முன்னணி நடிகர்களின் படங்களிலும் கமிட்டாகி நடித்து வந்தார்.
சினிமாவில் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயத்திலே கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபரான கெளதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு நீல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார் காஜல் அகர்வால். அப்போது செல்பி எடுப்பதற்காக வந்த ஒருவர், அவரின் இடையில் கை வைத்துள்ளார். இதனால் கடுப்பான காஜல் அகர்வால் என்ன இதெல்லாம் என கோபப்பட்ட, அந்த நபர் பாக்ஸர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.