1. Home
  2. தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் சமாதியில் கண்ணீர்விட்டு அழுத நடிகர் சூர்யா..!

Q

கேப்டன் விஜயகாந்த் மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். மேலும், அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். விஜயகாந்த் உடலுக்கு ரஜினி, கமல், விஜய், இளையராஜா என பல்வேறு திரைப் பிரபலங்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சூர்யா, பாரதிராஜா உள்ளிட்ட சிலர் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டு வருத்தம் தெரிவித்தனர். பின்பு 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு அருகே உள்ள தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் நினைவிடத்தில் நடிகர் சூர்யா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தில் சுமார் 5 நிமிடத்திற்கு மேல் தரையில் அமர்ந்திருந்த அவர், சமாதியில் கண்ணீர்விட்டு கதறி துடித்தார். இதனைத்தொடர்ந்து, சாலிகிராம இல்லத்திற்கு செல்லும், அவர், அங்கு பிரேமலதா மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். சூர்யாவை தொடர்ந்து, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

Trending News

Latest News

You May Like