அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டார் நடிகர் சிம்பு..!

சிம்பு அவரது எக்ஸ் தளத்தில் நேற்று முன்தினம் ஒரு பதிவு ஒன்றை பகிர்ந்தார். அது இணையத்தில் வைரலானது. அதில் அவர் '2000 களில் நடித்த படங்களான தம், மன்மதன், வல்லவன், விடிவி, இவையெல்லாம் சேர்த்து ஜென் சி மோடில் அப்படி இருக்க போறது நம்முடைய அடுத்த திரைப்படம்' என பதிவிட்டுள்ளார்.
அதைத்தொடர்ந்து நேற்று (அக். 20) அடுத்த பதிவை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் 'டேய் 2கே கிட்ஸ், 90ஸ் மூட்ல நாளைக்கு 6.06 மணிக்கு ஷார்ப்பா வரேன்' என பதிவிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தனர். இப்படம் அவரது 50- வது திரைப்படத்தை குறிக்கிறது அதை அவரே இயக்கவும் உள்ளார் என்ற செய்திகள் பரவின.
இந்நிலையில், இன்று (அக். 21) மாலை 6.06 மணிக்கு சிம்பு தனது 49வது படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, அடுத்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளதாகவும் அப்படத்தின் பெயர் 'கட்டம் கட்டி கலக்குறோம்' எனவும் வெளியிட்டுள்ளார். STR -ன் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Extremely happy to associate with our prestigious @Ags_production & My dear fan, the talented and youthful director @Dir_Ashwath for a terrific entertainer ❤🔥
— Silambarasan TR (@SilambarasanTR_) October 21, 2024
Kattam Katti Kalakrom 🔥#VintageSTRmood #AGS27
#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh… pic.twitter.com/c9BSMTll0c