நடிகர் மன்சூர் அலிகான் 2 சுற்றுகளில் 41 வாக்குகள் மட்டுமே பெற்றார்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ef87d0a64015055efaf0f4e01a7a66be.jpg?width=836&height=470&resizemode=4)
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பாளராக களம்காண்கிறார்.வேலூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளார்.
தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த மாதம் 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டார். அவர் வேலூர் தொகுதியில் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டார். இந்த வேலூர் தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த், பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிட்டார். அதேபோல் அதிமுக சார்பில் பசுபதி, நாம் தமிழர் சார்பில் மகேஷ் ஆனந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் சற்று முன் வந்த தகவலின்படி வேலூரில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் இரண்டு சுற்றுகளில் மொத்தம் 41 வாக்குகள் பெற்றார் என தகவல் வெளியாகியுள்ளது