AC - காற்று வழியாக பரவும் கொரோனா !! 9 பேர் பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது சீனாவில் படிப்படியாக குறைந்து வந்தாலும் மற்ற நாடுகளில் அதிர்வலைகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி கொண்டு தான் உள்ளது.
இந்நிலையில், சீனாவில் உள்ள அதே உகானில் குவாங்சோ பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய ஒருவருக்கு அவரை அறியாமல் கொரோனா தொற்று இருந்ததாகவும் , தற்போது அவருடன் இணைந்து உணவருந்திய 9 பேருக்கு ஏசி காற்று வழியாக கொரோனா பரவியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
ஏர் கண்டிஷனிங் யூனிட் வழியாக இந்த கொரோனா பரவுவதாகவும், காற்றோட்டத்தின் திசை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும், வைரஸை சுமக்கும் நீர் துளிகள் இந்த வேலையே செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர். ஏற்கனவே உலக சுகாதார மையம் குளிர் பகுதிகள் , ஈரப்பதம் உள்ள பகுதிகளில் அதிக நேரம் உயிர் வாழும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Newstm.in