கோர விபத்து..! லாரி மீது கார் மோதியதில் 4 பேர் பலி..!

ராஜஸ்தானின் பரன் மாவட்டம் கஜன்புரா பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 4 பேரும் உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.