மும்பையில் ஒரு தெருவுக்கு நடிகை ஸ்ரீதேவியின் பெயர் சூட்டல்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/d0666fb734188e607e11323978d3f3bb.webp?width=836&height=470&resizemode=4)
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பையில் ஒரு தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரண்டு மகள்கள். இவர்கள் இருவரும் தற்போது நடித்து வருகிறார்கள். கடந்த 2018ம் ஆண்டு துபாய் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியல் அறைவில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் நினைவை போற்றும் விதமாகவும் அவரை கவுரவப்படுத்தும் வகையிலும் மும்பை மாநகராட்சி, லோகண்ட்வாலா சந்திப்பு ஒன்றுக்கு ஸ்ரீதேவி கபூர் சவுக் (Sridevi Kapoor Chowk) என பெயரிட்டுள்ளது. இந்தப் பகுதியில்தான் ஸ்ரீதேவி வசித்து வந்தார். கடந்த காலத்தில் ஸ்ரீதேவியின் குடும்பம் அதே பகுதியில் உள்ள கிரீன் ஏக்கர் டவரில் வசித்து வந்த நிலையில், தற்போது அந்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டியுள்ளனர்.அவர் இறுதி ஊர்வலமும் இந்த வழியாகத்தான் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.