1. Home
  2. தமிழ்நாடு

மனிதன் பட பாணியில் நடந்த கோரம்..! வாசலில் உறங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண்..!

1

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றிய வடமாநிலப் பெண்.

சென்னை அசோக் நகரில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.சென்னை அசோக் நகரில் சரிதா என்பவரது வீட்டு நிகழ்ச்சிக்காக உறவினர்கள் வந்திருக்கின்றனர். வீட்டில் இடப்பற்றாக்குறை காரணமாக சிலர் வாசலில் உறங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டில் இடமில்லாததால் சிலர் வெளியே உறங்கியுள்ளனர். 

அப்போது கூகுள் மேப்பை நம்பி ஒட்டி வந்த வட மாநில பெண் ஒருவர் முட்டு சந்து என தெரியாமல் அதிவேகமாக காரை இயக்கியுள்ளார். அப்போது அங்கு அசந்து தூங்கி கொண்டிருந்த 7 பேர் மீது கார் ஏறி  
விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேரின் கால்கள் மீது கார் ஏறியுள்ளது. இதில் 2 பெண்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வட மாநிலப் பெண் ஷில்பா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இந்நிலையில் விபத்து குறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில், “செம ஸ்பீடா கார் ஓட்டிட்டு வந்தாங்க... அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தோம்... 7 பேரு மேல காரை ஏத்திட்டி அந்த பொண்ணு நிக்காம போயிட்டே இருக்காங்க... முட்டு சந்து இல்லையென்றால் தப்பித்து ஓடிப்போயிருப்பார். மதுபோதையில் அந்த பெண் இருந்தார். முதலில் குழந்தை மீதுதான் காரை ஏற்றினார். பிறகு அடுத்தடுத்து படுத்திருந்தவர்கள் மீது காரை ஏற்றினார்” என்றனர்.

 

 

Trending News

Latest News

You May Like