1. Home
  2. தமிழ்நாடு

வீதியில் உலா வரும் சிறுத்தை... திருப்பத்தூர் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!

1

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மேரி இம்மாகுலேட் என்ற தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்போது புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தான் இன்று மாலையில் பள்ளியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் திருப்பத்தூரை சேர்ந்த 55 வயது நிரம்பிய கோபால் என்பவர் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீரென்று அங்கு சென்ற சிறுத்தை கோபாலை தாக்கியது. அவர் அலறி துடித்தார். இதற்கிடையே சிறுத்தை அங்கிருந்து அருகே உள்ள குடியிருப்புக்குள் நுழைந்து கார் பார்க்கிங்குள் நுழைந்தது. இந்த தாக்குதலில் கோபால் தலையில் காயம் அடைந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே கார் பார்க்கிங்கில் சிறுத்தை பதுங்கிய நிலையில் பள்ளியில் இருந்த மாணவிகள் அவசர அவசரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி ஒலிபெருக்கியில் சிறுத்தை நடமாட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டது. அதோடு பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் மாணவ-மாணவிகளின் நலன் கருதி திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like