ஒரு நாள் உள்ளூர் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒரு திருவிழாவான ஓணம் பண்டிகை ஆகஸ்ட் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் வெகு கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை, இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக களை இழந்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாட வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையடுத்து, ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 21ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்து உத்தரவிட்டுள்ளார். மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், செப்டம்பர் 11ம் தேதி பணி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.