1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? நயினார் நாகேந்திரன் பளீச்!

Q

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இணைந்து செய்தியாளர் செய்தியாளர்களை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்.

அப்போது பேசிய அவர், என் மண் என் மக்கள் பயணத்தின் எழுச்சி எந்த அளவுக்கு உள்ளது என்பதை கடந்த 2 நாட்களாக தான் பார்ப்பதாக கூறினார். மேலும் உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்ற கூறிய நயினார் நாகேந்திரன், அந்த கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருப்பதாக விமர்சித்தார்.

மேலும் திமுக ஆட்சியை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறிய நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் ஹெரால்டு ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக இளைஞர் அணியினர் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேபோல் பெண்கள் குறித்து இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பாஜக மகளிர் அணியினர் போராட்டம் நடத்துவார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவித்தார். இந்த போராட்டங்கள் தொடர்பான தேதியும் நேரமும் பின்னர் அறிவிக்கப்படும் என்றார். தொடர்ந்து தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி மட்டும்தான் கூட்டணி ஆட்சி இல்லை என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்,

அதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன் கூட்டணி ஆட்சி பாஜக மத்திய தலைமை பேசி முடிவு செய்யும் என்றார். அன்றைய சூழலில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி இணைந்து முடிவு செய்வார்கள் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். அதிமுக நிலைபாடு மாறுகிறதா என்பது குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மேலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் இழக்கும் என்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். முன்னதாக தமிழக பாஜக தலைவராக தன்னை நியமித்த பாஜக தலைவர்கள் மற்றும் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்தார். நன்றி என்ற மூன்று வார்த்தை மிகவும் முக்கியமானது என்றும் கடைசி வரை நன்றியுடன் இருப்பேன் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like