1. Home
  2. தமிழ்நாடு

நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்...

நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்...


திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் வசித்து வருபவர் முகமது ஃபாருக். மதபோதகரான இவரும் முகமது அஸ்லாமும் நண்பர்கள். அஸ்லாம், கே.கே நகரைச் சேர்ந்த பர்வீன் என்ற பெண்ணை கடந்த 2008 ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அனைத்து வகையிலும் எனக்கு முகமது ஃபாரூக்தான் செய்து வந்துள்ளார் என்று நண்பரை பற்றி அவரது மனைவி பர்வீனிடம் சொல்லி வந்திருக்கிறார் அஸ்லாம். நகையும் சதையும் போல் இருந்த இவர்களது நட்பு நாளடைவில் இணைபிரியாத அளவுக்கு சென்றுவிட்டது.

இதனை பயன்படுத்திக் கொண்ட முகமது ஃபாரூக், தனது நண்பன் அஸ்லாமிடம் , என்னிடம் புனித நீர் இருக்கிறது. இந்த நீர் யாருக்கும் கிடைக்காது. இதனை உன் மனைவிக்கு கொடுக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

இதனை நம்பிய அஸ்லாம், தனது மனைவிக்கு கொடுக்க சம்மதித்துள்ளார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட முகமது ஃபாரூக், புனித நீர் என்ற பெயரில் தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்துள்ளார்.

மயக்கம் அடைந்த பர்வீனை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் முகமது பாரூக். மேலும் அவரிடம் இருந்து 25 பவுன் நகைகளையும் பறித்துள்ளார். பலமுறை பர்வீனை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நிர்வாணமாக போட்டோ எடுத்திருக்கிறார்.

நண்பனின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து பல நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்...

இதனை தனது கணவர் அஸ்லாமிடம் சொல்லிருக்கிறார் பர்வீன். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. இதற்கு முகமது ஃபாரூக்கின் மனைவி பாத்திமாவும் உடந்தையாக இருந்துள்ளார். முகமது ஃபாரூக்கால் பல கொடுமைகளை அனுபவித்து வந்த பர்வீன் ,

ஒரு கட்டத்தில் திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் முகமது பாரூக் மற்றும் அவரது கணவர் முகமது அஸ்லாம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like