1. Home
  2. தமிழ்நாடு

உதவி கரம் நீட்ட அழைப்பு..வாட்ஸ்அப் எண்கள் அறிவிப்பு!

1

மிக்ஜாம் புயலால் சென்னையில் மக்கள் மழை நீரில் சிக்கி தவித்து வருகின்றனர். மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் வரவைக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ராணுவத்தினரும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த நிலையில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களும் மீட்பு பணியில் தங்களை ஈடுபடுத்தி கொண்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான தண்ணீர், உணவு உள்ளிட்ட பொருட்களை வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.

மேலும் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தாமாக முன்வந்து மக்களுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும் என அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொள்ள தமிழக அரசு உதவி ஆணையர் – 9791149789 , 9445461712, 9895440669, 7397766651 என்ற வாட்ஸ்அப் எண்களை அறிவித்துள்ளது. இந்த எண்ணிற்கு கால் செய்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் தனிநபர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மீட்பு பணிகள் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

Trending News

Latest News

You May Like