1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் மீண்டும் உறவிற்கு அழைத்த 48 வயது பெண்... கொலை செய்த 23 வயது வாலிபர்..!

1

கர்நாடகா கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்து வந்தவர் ஷோபா (48). இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, கெடிகேஹள்ளியில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் ஷோபாவின் உடல் படுக்கை அறையில் கடந்த 19-ம் தேதி நிர்வாணமாக கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடிகேஹள்ளி போலீசார், வழக்குப்பதிவு செய்து ஷோபாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இக்கொலை தொடர்பாக ஷோபாவின் உறவினர்கள் மத்தியில் விசாரணை நடத்தினர். அப்போது ஹேரோஹள்ளி பகுதியைச் சேர்ந்த நவீன் (23) என்ற வாலிபருக்கும், ஷோபாவுக்கும் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்திய போது, இக்கொலை குறித்த அதிர்ச்சியான தகவல் வெளியானது.

Murder

இன்ஸ்டாகிராம் மூலம் நவீன் அறிமுகமாகி உள்ளார். இந்த அறிமுகம் அவர்களுக்குள் நேரடி தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன்பின் ஷோபா தனது மகளின் வயதுடைய நவீனுடன் தகாத உறவில் ஈடுபட ஆரம்பித்தார். கொலை நடந்த அன்று ஷோபாவின் வீட்டிற்கு நவீன் வந்திருந்தார். அவர்கள் இருவரும் உடல் ரீதியாக நெருக்கமாக இருந்துள்ளனர். ஆனாலும், மீண்டும் மீண்டும் அந்த உறவுக்கு நவீனை ஷோபா வலியுறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில், ஷோபாவை நவீன் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், “கொலை நடந்த அன்று ஷோபாவிற்கு அவரது மகள் போன் செய்துள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும் ஷோபா போனை எடுக்கவில்லை. இதனால் அவர் வீட்டிற்கு வந்து பார்த்த போது, ஷோபா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. தாய் நிர்வாணமான கோலத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மகள், போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து ஷோபா கொலை செய்யப்பட்டதே தெரிய வந்தது என்றனர்.

Police

இதையடுத்து நவீனை கொடிகேஹள்ளி காவல் நிலைய போலீசார், இன்று கைது செய்தனர். அவரிடம் ஷோபா கொலை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like