14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை..! 63 வயது முதியவருக்கு சாகும் வரை சிறை.!!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள திருவத்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். 63 வயதான இவர் கடந்த 2020 ஆம் வருடம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது கஜேந்திரன் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்தார். இதனையடுத்து கஜேந்திரன் மீது சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிறுமியின் பெற்றோர் புகார் அளித்ததை தொடர்ந்து கஜேந்திரனை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தொடர்பாக 63 வயதான குற்றவாளி கஜேந்திரனுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.