1. Home
  2. தமிழ்நாடு

நிச்சயிக்கப்பட்டவரின் கழுத்தை அறுத்தது ஏன்? – பெண் விளக்கம்!!

நிச்சயிக்கப்பட்டவரின் கழுத்தை அறுத்தது ஏன்? – பெண் விளக்கம்!!


ஆந்திர மாநிலம் அனாகபள்ளி மாவட்டம் மாடு குளமங்கலம் அத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமாநாயுடு (28) என்பவர் ஐதராபாத்தில் உள்ள சிஎஸ்ஐஆர் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிகிறார். அவருக்கும் ராதிக மாட்டம் கிராமத்தை சேர்ந்த புஷ்பா (22) என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டு இருந்தது.

திருமணம் மே 26ஆம் தேதி நடைபெறவிருந்தது. இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். இருப்பினும் அவரது பெற்றோர் புஷ்பாவுக்கு வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகளில் செய்து வந்தனர்.

புஷ்பாவின் பெற்றோர் உறவினர்களுக்கு பத்திரிகை வைப்பதற்காக வெளியூர் சென்று இருந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட புஷ்பா மணமகனுக்கு போன் செய்து பரிசு தருவதாக வரவழைத்தார். மணமகன் வந்ததும் அவரை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நிச்சயிக்கப்பட்டவரின் கழுத்தை அறுத்தது ஏன்? – பெண் விளக்கம்!!

திருமணத்திற்கு முன்பாக இருவரும் கேக் வெட்டி கொண்டாடலாம் என கூறி கேக் வாங்கிக்கொண்டு புஷ்பா வீட்டிற்கு சென்றனர். கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஊட்டிக்கொண்டனர். அதன் பின்னர் இன்ப அதிர்ச்சி தரக்கூடிய பரிசு வழங்க உள்ளதால் கண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என மணமகனிடம் புஷ்பா தெரிவித்தார்.

இதற்கு மணமகன் சம்மதம் தெரிவித்ததால் தன்னுடைய துபட்டாவை எடுத்து மணமகனின் கண்ணை கட்டினார். பின்னர் திடீர் என தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணமகனின் கழுத்தை அறுத்தார்.

மணமகனின் கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனை அடுத்து புஷ்பா மணமகனை அனகா பள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். மணமகன் தடுக்கி கத்தியின் மீது விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்து விட்டு தப்பிச் சென்றார்.

நிச்சயிக்கப்பட்டவரின் கழுத்தை அறுத்தது ஏன்? – பெண் விளக்கம்!!

சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து புஷ்பாவை கைது செய்தனர். விசாரணையில், ‘பிரம்ம குமாரிகள் சமாஜத்தில் இணைந்து துறவியாக வாழ நான் புஷ்பா திட்டமிட்டிருந்தார்.

ஆனால் பெற்றோர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் அவர்களிடம் தன்னுடைய விருப்பத்தை கூற இயலாத நிலையில் புஷ்பா இருந்துள்ளார். இதனால் வருங்கால கணவரை கொலை செய்து விட்டால் இந்த பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று இவ்வாறு செய்ததாக புஷ்பா கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like