1. Home
  2. தமிழ்நாடு

கொடுத்த கடன் கேட்டது ஒரு தப்பா ..? கடன் கொடுத்தவரை துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்!!

கொடுத்த கடன் கேட்டது ஒரு தப்பா ..? கடன் கொடுத்தவரை துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்!!


திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் நித்யா. இவரது கணவர் வெற்றிச்செல்வன், அதே கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக பெற்றுள்ளார். பல ஆண்டுகளாகியும் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், குணசேகரன் தனது உறவினர்களை வெற்றிச்செல்வனின் வீட்டிற்கு அழைத்து வந்து தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெற்றிச்செல்வன், மதுபோதையில் கடனை கேட்க வந்த குணசேகரன் மற்றும் அவரது உறவினர்களை வெட்ட முயன்றள்ளார்.

கொடுத்த கடன் கேட்டது ஒரு தப்பா ..? கடன் கொடுத்தவரை துரத்திய திமுக கவுன்சிலரின் கணவர்!!

இதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன் அச்சத்தில் தப்பியோடிய நிலையில், அவரை வெற்றிச்செல்வன் அரிவாளுடன் சாலையில் துரத்திக்கொண்டு ஓடினார். அப்போது, அவரை தடுக்க முயன்ற கிராமத்தினரையும் வெற்றிச்செல்வன் வெட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனை அங்கிருந்த இளைஞர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து வீடியோ காட்சியின் அடிப்படையில் சிறுகனுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெற்றிச் செல்வனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending News

Latest News

You May Like