1. Home
  2. தமிழ்நாடு

விரைவில் டும் டும் டும்.. தொடக்கமாக பொங்கல் வைத்த நயன்தாரா !!

விரைவில் டும் டும் டும்.. தொடக்கமாக பொங்கல் வைத்த நயன்தாரா !!

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரௌடிதான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் காதலிக்க தொடங்கினர்.

அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியீட்டு வந்தனர்.

சுமார் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் நடந்ததாக நயன்தாராவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதையடுத்து ரசிகர்கள் இவர்களது திருமணம் குறித்த கேள்விகளை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

விரைவில் டும் டும் டும்.. தொடக்கமாக பொங்கல் வைத்த நயன்தாரா !!

இந்நிலையில் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதையடுத்து நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பல்வேறு கோவில்களுக்கு ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

அந்தவகையில் இன்று அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதற்காக நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்தனர். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வழுத்தூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குல தெய்வ கோவிலான காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் சாமி தரிசனம் செய்தனர்.

விரைவில் டும் டும் டும்.. தொடக்கமாக பொங்கல் வைத்த நயன்தாரா !!

அப்போது பொங்கல் வைத்து பயபக்தியுடன் இருவரும் சாமி கும்பிட்டனர். இருவரும் ஜோடியாக வழிபட்டனர். நயன்தாரா வருவதை அறிந்த ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் காத்திருந்தனர். நயன்தாரா சாமி கும்பிட்டு வெளியே வந்தவுடன் ரசிகர்கள் சிலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Newstm.in

Trending News

Latest News

You May Like