1. Home
  2. தமிழ்நாடு

தக்காளி காய்ச்சல் – எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

தக்காளி காய்ச்சல் – எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!


தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ், குரங்கு அம்மை பாதிப்பு வரிசையில் இந்தியாவில் இதுவரை 82 பேருக்கு தக்காளி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரள மாநிலம் கொல்லத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே இந்த நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தக்காளி காய்ச்சல் – எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்!!

இந்நிலையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 18 வயதை கடந்தவர்களில் 96.99% பேர் முதல் தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like