1. Home
  2. தமிழ்நாடு

என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்டவனுடன் மணிக்கணக்கில் பேசிய மனைவி... கடைசியில் நடந்த விபரீதம்..!!

என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்டவனுடன் மணிக்கணக்கில் பேசிய மனைவி... கடைசியில் நடந்த விபரீதம்..!!


சென்னை அம்பத்தூர் நேரு தெருவில் வசித்து வருபவர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் பிரம்மா (வயது 26).இவரது மனைவி ரஷீயா கத்துனா (வயது 22). ஹிரிஷ் பிரம்மா பட்டரைவாக்கத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 29-ம் தேதி ரஷீயா தவறி விழுந்ததில் தலையில் அடிப்பட்டுள்ளதாகக் கூறி அவரை ஹரிஷ் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளார். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாகத் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் ரஷீயாவின் உடற்கூறு ஆய்வில் அவரது தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்யப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து போலீசார் ஹரிஷ் பிரம்மாவிடம் நடத்திய விசாரணையில், மனைவி சில ஆண்டுகளாக வேறு சில ஆண்களுடன் தொடர்ந்து செல்போனில் பேசிவந்துள்ளார். இதை கண்டித்தும் அவர் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதால் அவரது தலையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like