1. Home
  2. தமிழ்நாடு

மசாஜ் செய்வதில் பிரச்சனை.. பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் !!

மசாஜ் செய்வதில் பிரச்சனை.. பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் !!


கோவை சிங்காநல்லூர் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த மினி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் சூலூரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வருகின்றார். இந்த மசாஜ் சென்டரில் ஆயூர்வேத மூலிகை எண்ணைய் மூலம் முட நீக்கியல் செய்கின்றனர்.

இந்த நிலையில், மினியும் அவரது உறவினரும் வீட்டில் இருந்த பொழுது, அங்குசென்ற இரண்டு இளைஞர்கள் தங்களுக்கு மசாஜ் செய்யவேண்டும் என்று கேட்டு இருக்கின்றனர். அப்பொழுது 30 வயது குறைவான ஆண்களுக்கு மசாஜ் செய்வது இல்லை என்றும் சூலூர் சென்ரில் மட்டுமே மசாஜ் செய்யப்படும், வீட்டில் செய்யமாட்டோம் எனவும் பதில் அளித்தனர்.

மசாஜ் செய்வதில் பிரச்சனை.. பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் !!

ஆனால் மினியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் பணம் கேட்டும் மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் அத்துமீறி உள்ளே நுழைந்த இளைஞர்கள், மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து மினியின் தலை பகுதியில் வெட்டினர். காயம் அடைந்த மினி சப்தமிடவே அந்த இளைஞர்கள் தப்பி ஓடினர். தலை மற்றும் கையில் காயம் அடைந்த மினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மினி அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது அதே தினத்தில் பீளமேடு பகுதியில் ரவிகுமார் என்ற ஒர்க்ஸாப் தொழிலாளியை அருவாளால் தாக்கியது தொடர்பாக பீளமேடு காவல்துறையினர் குற்றவாளியை தேடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இரு இடங்களில் பதிவான சிசிடிவிகாட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல்தான் என தெரியவந்தது.

மசாஜ் செய்வதில் பிரச்சனை.. பெண்ணை அரிவாளால் வெட்டிய இளைஞர் !!

அதன்பேரில், பீளமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும் அவருடன் இருந்த மற்றொரு நபரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்த போலீசார், பீளமேடு பகுதியில் முள்ளுகாட்டில் இருந்த மணிகண்டனை கைது செய்தனர். மணிகண்டனுடன் இருந்த சிலரை பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைதான மணிகண்டன் பீளமேடு பகுதியில் போதை கும்பலுடன் சுற்றிதிரியும் நபர் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஒரே நாளில் அருவாளால் இரு தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான மணிகண்டன் மீது சரவணம்பட்டி, பீளமேடு காவல் நிலையங்களில் வழிபறி, அடிதடி வழக்குகள் என 8 வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like