1. Home
  2. தமிழ்நாடு

கத்திரி வெயிலின் தாக்கம் குறையும்.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை..!

கத்திரி வெயிலின் தாக்கம் குறையும்.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை..!


தமிழகத்தில் இன்று (4-ம் தேதி) முதல் ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயில் தொடங்கியது. வரும் 28-ம் தேதி வரை உள்ள 25 நாட்களுக்கு கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைக்கும்.

அந்த வகையில் இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால்,மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கிழமை (6-ம் தேதி) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை (5-ம் தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது.

நாளை மறுநாள் (6-ம் தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் இன்றைய தினம் 30 முதல் 40 கிமீ வேகத்தில் தரைக் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கத்திரி வெயில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like