இன்று முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிப்பு..!!
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு இன்று(ஏப்ரல் 30-ம்) தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்துக்கு நான்கு நீதிபதிகள் வீதம் 20 பேர் விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல மதுரை கிளையில் வாரத்துக்கு மூன்று நீதிபதிகள் வீதம் 15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.