1. Home
  2. தமிழ்நாடு

திடீர் பரபரப்பு.. விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தம் !!

திடீர் பரபரப்பு.. விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தம் !!


கோவை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை, மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் சில நிமிடங்கள் தடுத்து நிறுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது .


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை செல்வதற்காக இன்று மதியம் மத்திய அமைச்சர் எல். முருகன் கோவை விமான நிலையம் வந்தார். அப்பொழுது விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல முயன்ற மத்திய அமைச்சர் எல். முருகனை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு சில நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பின்னர் மத்திய அமைச்சர் எல் முருகனை விமான நிலையத்திற்குள் செல்ல மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அனுமதித்தனர்.

திடீர் பரபரப்பு.. விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தம் !!
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்ல ஏற்கனவே முன்அனுமதி பெற்றிருந்தனர் அந்த அனுமதி அட்டையை சில நபர்கள் வைத்துக்கொண்டு முன்னரே விமான நிலையத்திற்குள் காத்திருந்து உள்ளனர் அவர்கள் வர தாமதமானதால் தான் மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் அவருடன் வந்த நபர்கள் அனைவரும் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர் என்றார்.

Neestm.in

Trending News

Latest News

You May Like