1. Home
  2. விளையாட்டு

இரட்டை ஜாக்பாட் அடித்தார் ஷிவம் துபே.. சி.எஸ்.கே. ரசிகர்கள் கொண்டாட்டம் !

இரட்டை ஜாக்பாட் அடித்தார் ஷிவம் துபே.. சி.எஸ்.கே. ரசிகர்கள் கொண்டாட்டம் !

கிரிக்கெட் வீரர் ஹிவம் துபேயின் மனைவி அஞ்சுமிற்கு இன்று நண்பகல் மகன் பிறந்தது. மகன் பிறந்த சில மணிநேரங்களில் ஷிவம் துபே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வாகியுள்ளார்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று தொடங்கியது. ஏலப்பட்டியலில் இடம்பிடித்த வீரர்கள் எண்ணிக்கை 600 ஆனது. இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர். முதல் நாள் ஏலத்தில், ராபின் உத்தப்பா, டிவாய்ன் பிராவோ, அம்பத்தி ராயுடு, தீபக் சஹார், கே.எம். ஆசிப் என்ற வீரர்களை எல்லாம் ஏலத்தில் எடுத்து இருந்தது சி.எஸ்.கே. இதனையடுத்து, சி.எஸ்.கே இரண்டாவது நாள் ஏலத்தில் முதல் வீரராக ஆல்ரவுண்டர் ஷிவம் துபேவை ரூபாய் 4 கோடி மதிப்பிற்கு எடுத்து இருக்கிறது.

இந்நிலையில், சென்னை அணிக்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய வீரர் ஷிவம் துபேவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ள சம்பவம் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை ஜாக்பாட் அடித்தார் ஷிவம் துபே.. சி.எஸ்.கே. ரசிகர்கள் கொண்டாட்டம் !

இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், அதிக அளவிலான மகிழ்ச்சி வாழ்வில் அரங்கேறுகிறது. ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார்.

அவர் இதனைப் பகிர்ந்த சில மணிநேரங்களில் ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஷிவம் துபே தேர்வு செய்யப்பட்டார். அவருக்கான அடிப்படை தொகையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ. 4 கோடிக்கு சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஆல்-ரௌண்டர் ஷிவம் துபே இதுவரை 24 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடி 399 ரன்கள் எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 22.17. ஸ்டிரைக் ரேட் 120.54. பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like