1. Home
  2. தமிழ்நாடு

கொலையை விட கொடியது கற்பழிப்பு.. இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை..!

கொலையை விட கொடியது கற்பழிப்பு.. இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை..!


மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 2012-ம் ஆண்டு, மனநலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமி இரண்டு பேரால் கற்பழிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 28 வயது வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தபோது ஒரு குற்றவாளி உயிரிழந்து விட்டார். எனவே, 28 வயது இளைஞருக்கு எதிராக விசாரணை நடந்து வந்தது.

இதில், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, இளைஞருக்கு எதிராக கோர்ட்டில் சாட்சியம் அளித்து இருந்தார். அதே நேரத்தில், இளைஞர் தரப்பில், ‘சிறுமி, வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு (உயிரிழந்தவர்) நபரை காதலித்ததாகவும், வாலிபரை வழக்கில் பொய்யாக சேர்த்து இருப்பதாகவும்’ வாதிடப்பட்டது.

இதை ஏற்க மறுத்த சிறப்பு கோர்ட், ‘சாதாரணமாகவே கற்பழிப்பு குற்றம் அதன் இயல்பிலே பயங்கரமானது. இந்நிலையில், மனநலம் பாதித்த சிறுமிக்கு எதிரான இந்த வன்முறை அதை விட பயங்கரமானது.

பெண்ணின் உயிரை அழிப்பதால் கற்பழிப்பு, கொலையை விட கொடிய குற்றம்’ எனக் கூறி, 28 வயது இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியது.

Trending News

Latest News

You May Like