1. Home
  2. தமிழ்நாடு

சிறை வைத்து சிறுமி கற்பழிப்பு.. குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!

சிறை வைத்து சிறுமி கற்பழிப்பு.. குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை..!


மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் பிவண்டியைச் சேர்ந்தவர் குட்டு அன்சாரி (31). இவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி அறை ஒன்றுக்கு அழைத்து சென்று கற்பழித்தார்.

இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ம் தேதி நடந்தது. சிறுமியை காணாமல் தேடிய பெற்றோர், மறுநாள் அறையில் இருந்து சிறுமியை மீட்டனர். இதையடுத்து, சிறுமியை அறையில் சிறை வைத்து அன்சாரி கற்பழித்ததாக போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து, கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அன்சாரியை கைது செய்தனர். மேலும், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக 9 பேர் சாட்சியம் அளித்தனர். விசாரணை நிறைவில், குட்டு அன்சாரி மீதான குற்றம் நிரூபணமானது.

இதையடுத்து, குற்றவாளி குட்டு அன்சாரிக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விர்கர் தீர்ப்பு அளித்தார்.

Trending News

Latest News

You May Like