1. Home
  2. தமிழ்நாடு

அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!

அதிகாரிகளின் சொத்துக்கள் ஆய்வு.. ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு..!


தமிழகத்தில், குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளின் சொத்துக்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கோட்டை நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் டேவிட் லியோ என்பவர், தனக்கு வழங்கப்பட்ட இட மாறுதல் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் விசாரித்தார். அப்போது, “லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் போதுமான அளவு அதிகாரிகளை கொண்டு, சிறப்பு குழுக்களை அமைத்து தரவுகளை உரிய முறையில் சேகரித்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையின் குரூப்-ஏ, குரூப்-பி அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். அவர்களின் சொத்துக்களை ஆய்வு செய்து பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.

அவற்றில் முறைகேடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால், சட்டவிதிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பள்ளிக்கல்வித்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்க, போதுமான காவல்துறை அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று, தமிழக காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like