1. Home
  2. தமிழ்நாடு

தள்ளிப்போகும் பள்ளித்திறப்பு… மாணவர்கள் குஷி!!

தள்ளிப்போகும் பள்ளித்திறப்பு… மாணவர்கள் குஷி!!


கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்று வரும் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைகிறது.

இதனிடையே, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், மாநிலத்தில் உள்ள 10,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

தள்ளிப்போகும் பள்ளித்திறப்பு… மாணவர்கள் குஷி!!

இவை அனைத்தும் ஜூன் இரண்டாம் வாரம் வரை நடைபெறுவதன் காரணமாக, பள்ளிகளை ஜூன் மாத இறுதியில் திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ஜூன் 4ஆம் வாரத்தில் பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. இதனால் ஏற்படும் கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like